Monday, October 12, 2009

மதச்சார்பின்மை பேசும் மத வெறியர்கள் கவனத்திற்கு...1

மனிதனை பாடாய் படுத்துகிறது மதம் என்னும் மதம். கடவுளை கும்பிடுகிறேன் என்பதற்காக உருவாக்கப்பட்ட மதங்கள் இன்று பிற மத கடவுள்களை கேவலப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டன.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்ற இந்து மதம் அதிகப்படியான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கடவுளை தொழுபவன் சத்தமில்லாமல் அதை செய்து கொண்டிருக்க கடவுள்கள் பெயரையும், பக்தியின் பெயரையும் பயன்படுத்தி பொறுக்கி தின்பவர்கள் அதிகமாகி விட்டனர்

என்றோ இருந்த பார்ப்பன ஆதிக்கம் இன்று இந்து மதத்தை கேவலப்படுத்துகிறது.

பல அமைப்புகள் இந்து மதத்தை பார்ப்பநீயங்களின் மதமாகவே கருதி விட்டன.

எஞ்சியுள்ள மற்ற சமூக இந்துக்களை பகைத்துக்கொள்ளவும் தயாராகி விட்டார்கள்.

சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற நினைப்பவர்கள் சங்கடமின்றி இந்து மதத்தவர்களை பகைத்துக்கொள்ள தயாராகி விட்டார்கள்

இதையெல்லாம் எதிர்க்க இந்து மதத்தவர்களே தயாராக இல்லை. சாதியின் பெயரால் பிளவுண்டு கிடக்கிறார்கள்.

இந்துக்களை பற்றி பகிரங்கமாகவே அரசியல் கம்பெனிகள் விமர்சிக்கிறார்கள்.சாதிய அமைப்புகளின் மூலம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்துடன்.

இந்துக்கள் இஸ்லாமியத்துக்கேதிரான வெறியர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
மதச்சார்பற்ற அமைப்புகள் என கூறிக்கொள்ளும் கம்யுனிசம்,பெரியாரிசம், உள்பட இஸ்லாமிய ஆதரவாளர்கள்,கிறித்துவ ஆதரவாளர்கள் பெருகிவிட்டனர்.


இந்துக்கடவுள்கள் தமிழ்க்கடவுள்கள் இல்லை என பொய் சத்தியம் செய்கிறார்கள்.

இஸ்லாமியனுக்கு பாதிப்பு என்ற பெயரில் ,தேச எதிர்ப்பு எண்ணம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

கடவுள் மறுப்பு என்ற புதிய மதம் ( இவர்களின் வெறியை பார்க்கும் பொது அப்படித்தான் சொல்ல முடிகிறது) இந்துக்களை மேலும் எதிரியாக்குகிறது.இவர்களால் மற்ற மதத்தினரை சாட முடிவதில்லை.

தமிழ் ஆர்வம் என்ற பெயரில் மற்ற மொழிகள் கற்கும் எண்ணம் துடைத்தெடுக்கப்படுகிறது

இந்திய அரசின் சலுகைகளை பச்சையாக அனுபவித்து அதன் மூலம் முன்னேறி விட்டு ,தேசியத்தை எதிர்க்கிறார்கள்.(ஆனாலும் அரசு சலுகைகளை விடுவதில்லை )

சில சாதி மக்கள் ஒடுக்கப்படுவதாக கூறி அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்கள்.
இவ்வாறாக ,(இன்னமும் நிறைய இருக்கிறது) மதவெறியை அமைப்புகள் வளர்த்தெடுக்கின்றன .ஆனால் இந்து ,முசுலிம்,கிறித்துவன் என்ற வேறுபாடு மக்களிடம் இருப்பதாக அறியமுடியவில்லை


மத அமைப்புகளே ,மற்றைய மதங்களுக்கிடையில் பகையை வளர்த்தெடுக்கின்றன.

இந்துக்களை எதிர்க்க வேண்டும் என்பதைத்தவிர இவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது..

இது இப்படியிருக்க.. இஸ்லாமியத்தை துடைத்தெறியவும் ஒரு கும்பல் கிளம்பிவிட்டது.
தொடர்ந்து அலசுவோம்..








No comments:

Post a Comment